வெளிநாட்டு பறவைகளுக்கு பதில் உள்நாட்டு ஆடுகள் மேய்ச்சல்
Tirunelveli King 24x7 |20 Sep 2024 5:21 AM GMT
கூந்தன்குளம் சரணாலயம்
திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பு செப்டம்பர் மாதத்தில் கோடை காலம் போல் வெயில் தொடர்ந்து கொளுத்துகிறது. இதன் காரணமாக குளங்களில் நீர் வேகமாக வற்றி வருகிறது. அதனை போன்று பறவைகளின் சரணாலயமான கூந்தன் குளத்திலும் நீர் இருப்பு வெகுவாக குறைந்து மேய்ச்சல் நிலமாக மாறிவிட்டது. இதனால் வெளிநாட்டு பறவைகளுக்கு பதில் உள்நாட்டு ஆடுகள் முகாமிட்டு தண்ணீர் இல்லாத குளத்தில் மேய்கின்றன.
Next Story