குளியல் அறையில் வழுக்கி விழுந்து பெண் பலி

குளியல் அறையில் வழுக்கி விழுந்து பெண் பலி
தூத்துக்குடி அருகே குளியல் அறையில் வழுக்கி விழுந்து பெண் பரிதபாமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்தவர் மரிய அலங்காரம் மனைவி அந்தோணியம்மாள் (56), இவர் தனது வீட்டில் குளியல் அறையில் வழுக்கி விழுந்து பலத்த காயமடைந்தார். இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story