மூக்கனாங்குறிச்சி- புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து துவக்கி வைத்தார் எம் எல் ஏ. சிவகாமசுந்தரி.

மூக்கனாங்குறிச்சி- புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து துவக்கி வைத்தார் எம் எல் ஏ. சிவகாமசுந்தரி.
மூக்கனாங்குறிச்சி- புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து துவக்கி வைத்தார் எம் எல் ஏ. சிவகாமசுந்தரி. கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மூக்கணாங்குறிச்சி ஊராட்சியில் உள்ள பெரியார் நகர் பகுதியில் இருந்து கரூர் நகர பகுதிக்கு புதிய வழித்தடத்தில் அரசு பேருந்தை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி இந்த துவக்கி வைத்தார். இதுவரை இந்த பகுதியில் இருந்து நகரப் பகுதிக்கு பேருந்து வழங்காத நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் இந்த வழித்தடத்தில் பேருந்து இயக்கம் வண்ணம், பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த ரிப்பனை வெட்டி, கொடியசைத்து துவக்கி வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. இதனால் பொதுமக்கள் பேருந்துக்கு பூஜை செய்து, சூறை தேங்காய் உடைத்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிவகாமி வேலுச்சாமி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ராமலிங்கம், முன்னாள் மூப்பனாங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் சிவசாமி, அரசு பேருந்து கழக பொது மேலாளர் சிவசங்கரன், கிளை மேலாளர் நல்லகுமார், வணிக உதவி பொறியாளர் முருகானந்தம், ஊர் பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story