புதுகை கோட்டாட்சியர் வாகனம் மோதியதில் இருவர் பலி!
Pudukkottai King 24x7 |20 Sep 2024 10:54 AM GMT
விபத்து செய்திகள்
புதுக்கோட்டை கோட்டாட்சியராக பணியாற்றி வருபவர் ஐஸ்வர்யா இவர் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவருக்காக கொடுக்கப்பட்டுள்ள அரசு வாகனமான பொலிரோ வாகனத்தில் திருமயம் நோக்கி சென்று கொண்டிருந்தார் . அப்போது லேனா விளக்கு அருகே நகரத்துப்பட்டி என்னுமிடத்தில் கோட்டாட்சியரின் வாகனம் சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனமும் இவர் சென்ற வாகனம் நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அபிராமி புரத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினார்கள். மேலும் இந்த விபத்தில் சிக்கிய கோட்டாட்சியர் ஐஸ்வர்யா மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவரும் சிறு காயங்களுடன் தனியார் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து முதற்கட்டமாக நமன சமுத்திரம் காவல்துறையினர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story