நல்லாசிரியர் விருது பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்
Palladam King 24x7 |20 Sep 2024 11:17 AM GMT
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் பாராட்டு விழா
பல்லடத்தை அடுத்த மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக பணி செய்த ஆசிரியர் செல்வகுமாருக்கு தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கியது.நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் செல்வகுமாருக்கு பல்வேறு தரப்பினர் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இன்னிலையில் நல்லாசிரியர் விருது பெற்ற செல்வகுமாருக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர்,மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் கொங்கு ராஜேந்திரன் கலந்து கொண்டு ஆசிரியருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதில் மண்டல செயலாளர் பொன்னுச்சாமி,மண்டல துணைச் செயலாளர் தனசேகர்,மங்கலம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story