விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் பேராசிரியர்கள் வாயில் முழக்க போராட்டம்

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் பேராசிரியர்கள் வாயில் முழக்க போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
விருத்தாசலம், செப்.21- விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல தலைவர் மகேசன் தலைமையில் வாயில் முழுக்க போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கல்லூரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வு பெறும் வயதில் மாற்றுப் பணி வழங்குவதை நிறுத்தி மாற்று பணியை ரத்து செய்ய வேண்டும். புத்தொளி, புத்தாக்க பயிற்சிகளுக்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும். பேராசிரியர்களுக்கு பணி மேம்பாடு வழங்கிட வேண்டும். யுஜிசி பரிந்துரையின்படி முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கல்லூரி பேராசிரியர்கள் சுந்தரச் செல்வன், முருகேசன், வேல்விழி, ஹெலன் ரூத் ஜாய்ஸ், கருணாநிதி, பிரதீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story