பெண் போலீஸ் தற்கொலை முயற்சி ஆஸ்பத்திரியில் அனுமதி
Nagercoil King 24x7 |20 Sep 2024 1:29 PM GMT
இராஜாக்கமங்கலம்
குமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் அருகே உள்ள தெக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பாக்கியலட்சுமி (36). இவர் நாகர் கோவிலில் மகளிர் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வேலை முடிந்து வீட்டில் சென்ற பாக்கியலட்சுமி திடீரென தூக்கில் தொங்கியுள்ளார். இதை பார்த்த அவரது குழந்தைகள் கூச்சலிட்டனர். அக்கம்பக்கத்தினர் அங்கே ஓடி வந்து தூக்கில் தொங்கிய பாக்யலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பாக்கியலட்சுமி தற்கொலை முயன்றது சம்மந்தமாக கணவர் பிரபாகரனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாகவும், இதனால் அவர் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரியவந்துள்ளது. இவர் ஏற்கனவே இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் பிரபாகரன் தெரிவித்தார். இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பெண் போலீஸ் இன் தற்கொலை முயற்சிக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? எனவும் விசாரணை நடக்கிறது.
Next Story