ரோட்டரி கிளப் ராசிபுரம் ராயல் மற்றும் சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம்..
Rasipuram King 24x7 |20 Sep 2024 1:39 PM GMT
ரோட்டரி கிளப் ராசிபுரம் ராயல் மற்றும் சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம்..
ரோட்டரி கிளப் ராசிபுரம் ராயல் மற்றும் சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய பொது மற்றும் சிறப்பு - காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை அன்று ராயல் ஹாலில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனர். அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை அளிப்பதற்கு சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் அவர்களுக்கு உணவு தங்குமிடம் சிகிச்சை அனைத்தும் தாளாளர் கருணாநிதி, அவர்களின் அறிவுரையின்படி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிகழ்வில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சி இ ஓ டாக்டர் மனோகரன், தலைமையேற்று மருத்துவ முகாம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் மருத்துவமனை இ என் டி துறைத் தலைவர் டாக்டர் சிவக்குமார் , கதிர்வேல், வித்யா, மற்றும் மருத்துவமனை அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் ரோட்டரி சங்க தலைவர் பூபாலன் ,செயலர் ராமலிங்கம், பொருளாளர் அருள் பாபு, திட்ட சேர்மன் மணிகண்டன், மற்றும் உறுப்பினர்கள் சக்திவேல், ராஜ்குமார், ரமேஷ், அன்பழகன், ராஜேஷ், சபரிநாத், சோமக்கண்ணன், அசோக்குமார், கார்த்தி, விநாயகமூர்த்தி, நந்தலால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ரோட்டரி கிளப் ஆப் இராசிபுரம் ராயல் சார்பில் இலவச மருந்துகள் மற்றும் சிகிச்சை அளித்தவர்களுக்கும் மற்றும் தாளாளர் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
Next Story