கிளைச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கிளைச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது
பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். தொழிற்சங்க அலுவலகத்தில் பள்ளிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கிளைச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சி ஒன்றிய செயலாளர் ரவி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை பள்ளிபாளையம் பெரியக்காடு தனியார் மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற உள்ள சிறப்பு மாநாட்டில், கட்சியின் மாநில குழு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்க உள்ள நிலையில், பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ,மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும் கந்துவட்டி நிறுவனங்கள் அத்துமீறலால் தொழிலாளர்கள் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கும் வகையில் நடைபெறும் இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து கூட்டத்தில் பேசப்பட்டது.  கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கட்சி கிளை செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
Next Story