விருத்தாசலத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் தாய் மாயம்

விருத்தாசலத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் தாய் மாயம்
போலீசார் விசாரணை
விருத்தாசலம், காட்டுக்கூடலூர் ரோடு, அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் மகன் கோபி என்கிற பிரகாஷ் (46). இவரது மனைவி சிவசங்கரி (24). இவர்களுக்கு திருமணம் ஆகி ஒன்றரை வயதில் பிரபஞ்சன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கோபி சொந்த வேலை காரணமாக கடந்த 11ஆம் தேதி அன்று விழுப்புரம் சென்று விட்டு திரும்ப மாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் மனைவி சிவசங்கரி மற்றும் குழந்தை பிரபஞ்சன் இருவரும் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து கோபி விருத்தாசலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story