காங்கேயம் அருகே மண் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வட்டாட்சியரிடம் புகார்

X
காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வட்டமலை அருகே சேடங்காளி பாளையத்தில் கடந்த 9 மாதத்திற்கு முன்பு சிலர் ஆதிதிராவிடர் காலணி அருகே அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு நிலத்தில் 15 அடி ஆழத்திற்கு மண்வெட்டி லாரிகளில் அள்ளிச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து பகுதி வாழ் பொதுமக்கள் நேற்று காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி இடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர். சேடங்காளி பாளையத்தில் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த 9 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களது குடியிருப்புக்கு பின்புறம் 15 அடி ஆழத்திற்கு குளி வெட்டி மண்ணை அள்ளி உள்ளனர். இதனால் கால்நடைகள் உள்ளே விழுந்து இறந்து விடுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். மேலும் பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவே தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த குளிகளில் மீண்டும் மண்ணை கொட்டி குழியை மூடி தர வேண்டும் என தெரிவித்தனர்.
Next Story

