மின்வாரிய ஊழியர் தற்கொலை!

மின்வாரிய ஊழியர் தற்கொலை!
துயரச் செய்திகள்
பொன்னமராவதிஅருகே உள்ள சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்தவர் அண்ணா துரை (53). திருச்சி மாவட்டம் கல்லுப்பட்டி மின் வாரிய அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த 6 ஆண்டாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் மருத்துவ சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. சம்பவத் தன்று வயிற்று வலி அதிகரிக்கவே,வாழ்க்கையில் விரக்தியடைந்த அண்ணாதுரை விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் மணப்பாறை தனியார் மருத் துவமனையில் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து காரையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story