விழுப்புரத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

விழுப்புரத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கலந்து கொண்டு பேசினார்
விழுப்புரத்தில் பாதாள சாக்கடை, குடிநீர், சாலை, மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செயல்படுத்தாத, நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் சண்முகம் சிறப்புரையாற்றினார்.எம்.எல்.ஏ.,க்கள் அர்ஜூனன், சக்கரபாணி, மாநில எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் அற்புதவேல், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், ராமதாஸ், முருகன், சுரேஷ்பாபு, பன்னீர், ராஜா, விஜயன், கிருஷ்ணமூர்த்தி, முத்தமிழ்ச்செல்வன்.மாவட்ட மாணவரணி சக்திவேல், நகர துணைச் செயலாளர் செந்தில், வழக்கறிஞரணி தொகுதி செயலர் ராதிகா, ஸ்ரீதர், ஜானகிராமன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செங்குட்டுவன், மாநில ஜெ.,பேரவை துணை செயலாளர் பாலசுந்தரம்.ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் முத்தையன், துணைச் செயலாளர் பாலாஜி, மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், நகர செயலாளர்கள் தீனதயாளன், முருகவேல், வடபழனி, கார்த்திக் உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story