காதலியின் உறவினரை தாக்கிய வழக்கில் மேலும் இரண்டு பேரும் கைது
Dharapuram King 24x7 |21 Sep 2024 3:23 AM GMT
காதலியின் உறவினரை தாக்கிய வழக்கில் மேலும் இரண்டு பேரும் கைது
காதலியின் உறவினரை தாக்கிய வழக்கில் மேலும் இரண்டு பேரும் கைது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள புதுக்கோட்டை மேடு பகுதியை சேர்ந்தவர் சேதுபதி இவர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதலித்து வந்த பெண்ணின் உறவினரான பூபதி ராஜா என்பவர் சேதுபதியிடம் எனது உறவுக்கார பெண்ணை காதலிக்காதே என கூறியதாக கூறப்படுகிறது. இதனால் பாத்திரமடைந்த சேதுபதி தனது நண்பர்களுடன் உதவியுடன் பூபதி ராஜா வீட்டிற்கு சென்று அங்கு உள்ள பொருள்களை அடித்து உடைத்து பூபதி ராஜாவை தாக்கினார். இதில் பூபதி ராஜாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து பூபதி ராஜா தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சேதுபதியின் நண்பர்கள் நான்கு பேர் நேற்று முன்தினம் தாராபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் தலைமறைவாக இருந்த பெரிய காக்கா முட்டை என்ற தமிழரசன் வயது 25 மற்றும் ஆரோன் பாபு வயது 25 ஆகிய இரண்டு பேரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story