போலீசாரை மிரட்டியவர் அதிரடி கைது

போலீசாரை மிரட்டியவர் அதிரடி கைது
கைது
நெல்லை மாநகர டவுன் போலீசார் நேற்று பாறையடி பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தாழையூத்து அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இசக்கி துரை (36) என்பவரை பிடித்து சோதனை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாரை மிரட்டியுள்ளார். தொடர்ந்து அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா, ஒரு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story