மழை விபரம் தெரிவித்த மாவட்ட ஆட்சியர்

மழை விபரம் தெரிவித்த மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 53.55 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கமான மழை அளவான 23.50 மில்லி மீட்டர் மழையை விட 130 சதவீதம் அதிகமாகும். நடப்பு செப்டம்பர் மாதத்தில் 16 ஆம் தேதி வரை 2.33 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைகளில் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Next Story