திண்டுக்கல் நகரில் பழைய கட்டடங்கள் கண்டறியப்பட்டு நோட்டீஸ்

திண்டுக்கல் நகரில் பழைய கட்டடங்கள் கண்டறியப்பட்டு நோட்டீஸ்
மதுரை சம்பவம் எதிரொலி-: திண்டுக்கல் நகரில் உள்ள பழைய கட்டடங்கள் கண்டறியப்பட்டு நோட்டீஸ்
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட நத்தம்ரோடு, உள்பட பல்வேறு இடங்களில் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலர்கள் ஆய்வு செய்தனர். பழமையான கட்டடங்கள் 77 கண்டறியப்பட்டு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் நேற்று 21 கட்டடங்களுக்கு நோட்டீஸ் வழங்கி அதை அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. ஆட்கள் இல்லா கட்டிடங்கள், வீடுகளில் நோட்டீஸ் ஒட்டியுள்ளோம். மற்ற இடங்களில் இடிக்க சம்மந்தப்பட்டவர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம். 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். இல்லையேல் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர திட்டமிடுநர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Next Story