விராலிமலை விவசாயிகள் கவனத்திற்கு!
Pudukkottai King 24x7 |21 Sep 2024 4:31 AM GMT
வேளாண் செய்திகள்
தமிழக முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்தில் தாவர பூச்சிக்கொல்லி பண்புகள் உடைய நடவுக் குச்சிகள், ஆடாதோடா நொச்சி ஆகியவை விராலிமலை, நீர்பழனி வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு தகுதியுடைய விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படவுள்ளது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 50 நடவு குச்சிகள் 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்படும். இந்த வாய்ப்பை விராலிமலை வட்டார விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம். இத்தகவலை விராலிமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
Next Story