உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் ஆய்வு

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் ஆய்வு
இயற்கை நுண்ணையில் உரமாக்குதல் மையத்தை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்
அரசின் அனைத்து நலத்திட்டங்கள் சேவைகள் தங்குதடையின்றி மக்களுக்கு விரைந்து சென்றடைவதை உறுதிசெய்திட உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து மாதத்தோறும் மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டத்தில் தங்கி களஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிய அறிவுறுத்தியுள்ளார்கள்.அதனடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்களால் பல்வேறு பகுதிகளில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக,மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் பல்லடம் வட்டத்தில் தங்கி பல்வேறு அரசுதுறைகளின் மூலம் செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர்.உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட மாதப்பூரில் அமைந்துள்ள நுண்ணுயிர் உரமாக்கும் மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
Next Story