புஞ்சைபுளியம்பட்டி அருகே தொழிலாளி வாய்க்காலில் மூழ்கி பலி

புஞ்சைபுளியம்பட்டி அருகே தொழிலாளி வாய்க்காலில் மூழ்கி பலி
புஞ்சைபுளியம்பட்டி அருகே தொழிலாளி வாய்க்காலில் மூழ்கி பலி
புஞ்சைபுளியம்பட்டி அருகே தொழிலாளி வாய்க்காலில் மூழ்கி பலி சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 42). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை புஞ்சைபுளியம்பட்டி அருகே செண்பகப்புதூர் கீழ்பவானி வாய்க்காலில் நண்பருடன் குளித்துகொண்டிருந்தார்.வாய்க் காலின் ஆழமான பகுதியில் விஜயகுமார் குளித்துள்ளார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டார். இதை பார்த்த அங்கு குளித்து கொண்டிருந்தவர்கள் விஜய குமாரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. பின்னர் இதுகுறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று வாய்க்காலில் இறங்கி விஜயகுமாரை தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து 2-வது நாளாக அவரை நேற்று தேடினர். அப்போது அவர் குளித்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story