மாணவ மாணவிகளின் ஆபத்தை உணராத பள்ளி நிர்வாகம்

மாணவ மாணவிகளின் ஆபத்தை உணராத பள்ளி நிர்வாகம்
மாணவ மாணவிகளின் ஆபத்தை உணராத பள்ளி நிர்வாகம்
மாணவ மாணவிகளின் ஆபத்தை உணராத பள்ளி நிர்வாகம் ஈரோடு மாவட்டம் தாளவாடியிலிருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் செல்லும் நெடுஞ்சாலையில், நேதாஜி சர்க்கிள் பகுதியில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் கடந்த சில தினங்களாக குடிநீர் வசதி குறைபாட்டால் பள்ளி மாணவ மாணவிகள், பள்ளி வளாகத்தின் வெளியே அமைந்துள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடிப்பதற்காக போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் ஆபத்தான நிலையில் அன்றாடமும் சாலையை கடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விபத்து ஏதும் ஏற்படும்முன் பள்ளி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவ மாணவிகளுக்கு பள்ளி வளாகத்திற்குள் குடிநீர் வசதி சீராய் அமைத்துத்தர வேண்டி அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story