ஸ்ரீ பிரசன்ன ஐஸ்வர்ய பெருமாள், வெங்கடாஜலபதி சிறப்பு அலங்காரம்..

ஸ்ரீ பிரசன்ன ஐஸ்வர்ய பெருமாள், வெங்கடாஜலபதி சிறப்பு அலங்காரம்..
ஸ்ரீ பிரசன்ன ஐஸ்வர்ய பெருமாள், வெங்கடாஜலபதி சிறப்பு அலங்காரம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் 12.வது.வார்டு முத்துசாமி தெருவில் காந்தி சாலை ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் அலங்கார பந்தலில் ஸ்ரீ பிரசன்ன ஐஸ்வர்ய பெருமாள், வெங்கடாஜலபதி, ஸ்ரீதேவி பூதேவி சுவாமிகள் அமைக்கப்பட்டிருந்ததது. நேற்று முன்தினம் காலை, 6 மணிக்கு பூர்வசுத்தி புண்யாவாஹன பூஜையும், மாலை, 7 மணிக்கு ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத சீனிவாசன் அலங்கார உற்சவருக்கு முதல்கால பூஜையும் லட்டு பிரசாதமும் வழங்கப்பட்டது. சனிக்கிழமை காலை, 8 மணிக்கு கோ பூஜையும், 9 மணிக்கு விஷீ கால பூஜை, விஸ்வரூபதரிசனம், பிரசாதம் வழங்கப்பட்டது. 12 மணிக்கு உச்சிகால பூஜை, பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு, 7 மணிக்கு சாயரட்சை பூஜை, லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ பிரசன்ன ஐஸ்வர்ய பெருமாள், வெங்கடாஜலபதி, ஸ்ரீதேவி பூதேவி சாமிக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் பொன்வருதராஜ பெருமாள் கோவிலில் காலை சிறப்பு அபிேஷகம் பூஜைகள் நடந்தது. அதேபோல், அபயஹஸ்த ஆஞ்சநயேர், வீர ஆஞ்சநேயர், வைரமலை ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story