கீரம்பூர் சுங்க சாவடியை மூட வேண்டும்! மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் மனு.

கீரம்பூர் சுங்க சாவடியை மூட வேண்டும்! மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் மனு.
போக்குவரத்து தொழிலுக்கு பெயர் பெற்ற நாமக்கல் என்பதால், உள்ளூர் மக்களுக்கும், லாரி உரிமையாளர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதால் சுங்கச்சாவடியை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாமக்கல் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு மாநகராட்சியின் எல்லையில் இருந்து 10 கி.மீ தொலைவிற்கு சுங்கச்சாவடி இருக்கக் கூடாது என்ற விதிமுறையை கொண்டு கீரம்பூர் சுங்குச்சாவடியை அகற்ற வேண்டும் என்று நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன் எம்பி மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கோரிக்கை மனுவை அனுப்பி உள்ளார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது நாமக்கல் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட NH-44ல் உள்ள ராசாம்பாளையத்தில் (கீரம்பூர் )உள்ள டோல் பிளாசா நாமக்கல் மாநகராட்சி எல்லையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பது எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகள் கட்டணம் (விகிதங்கள் மற்றும் வசூல் நிர்ணயம்) விதிகள், 2008ன் விதி 8ன் படி நான் அறிந்த வகையில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. இது சம்பந்தமாக, போக்குவரத்து தொழிலுக்கு பெயர் பெற்ற நாமக்கல் என்பதால், உள்ளூர் மக்களுக்கும், லாரி நடத்துனர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதால் சுங்கச்சாவடியை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் மாதாந்திர சீட்டு வழங்கப்பட்டாலும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.எனவே எதிர்காலத்திலும் நகர எல்லைக்குள் சுங்கச்சாவடிகள் அமைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story