சங்கடஹர சதுர்த்தி ராசிபுரம் இரட்டை விநாயகருக்கு தங்க கவச அலங்காரம்..

சங்கடஹர  சதுர்த்தி   ராசிபுரம் இரட்டை விநாயகருக்கு தங்க கவச அலங்காரம்..
சங்கடஹர சதுர்த்தி ராசிபுரம் இரட்டை விநாயகருக்கு தங்க கவச அலங்காரம்..
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு கடை வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இரட்டை விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக இரட்டை விநாயகருக்கு பால், தயிர்,மஞ்சள், சந்தனம் ,தேன், பஞ்சாமிர்தம்,பன்னீர,இளநீர், கரும்பு சாறு ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது. அருள்மிகு ஸ்ரீ இரட்டை விநாயகருக்கு தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மஹா தீபாராதனைகளுடன்பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும் வழங்கப்பட்டன.
Next Story