உலக போட்டியில் பங்கேற்க நாகர்கோவில் வீரருக்கு அரசு உதவி

உலக போட்டியில் பங்கேற்க நாகர்கோவில் வீரருக்கு அரசு உதவி
அமைச்சர் வழங்கினார்
குமரி மாவட்டம், மணிகட்டிபொட்டல் பகுதியை சேர்ந்தவர்  கண்ணன். இவர் உடற்பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2023-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற உலக இரும்பு மனிதன் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளதோடு, cholan Book of World Records புத்தகத்தில் இடம்பிடித்து சாதனைகள் பல தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.   தற்போது உலக அளவில் ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் (Madrid Nagar) நடைபெறும் 2024-ம் ஆண்டிற்கான உலக இரும்பு மனிதன் போட்டியில் கலந்து கொள்ள  தேர்வாகியுள்ளார். இப்போட்டியில் கலந்து கொள்ள தகுந்த பொருளாதார வசதி இல்லை என அவர் கோரிக்கை விடுத்தார்.         தொடர்ந்து அமைச்சர் மனோ தங்க ராஜ் அரசுக்கு வைத்த பரிந்துரையின் பேரில், கண்ணன்  உலக இரும்பு மனிதன் போட்டியில் கலந்து கொள்வதற்காக ரூ.2 இலட்சத்திற்கான காசோலையினை  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடற்பயிற்சியாளர்  கண்ணனிடம் வழங்கினார்கள்.
Next Story