அஇதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

அஇதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்
முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர், சிவபதி சிறப்புரை
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நல்லூரில் குளித்தலை சட்டமன்ற தொகுதி அஇஅதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா 116 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் தலைமை வகித்தார். குளித்தலை கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் ரமேஷ், குளித்தலை ஒன்றிய துணைச் செயலாளர் பாலதண்டாயுதம் ஆகியோர் வரைவேற்புரை ஆற்றினர். இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் என். ஆர் சிவபதி, தலைமை கழக பேச்சாளர் வடமதுரை பாலு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வின் போது குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை நகர செயலாளர் ராஜாளி மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் டி. டி விஜயவிநாயகம், என். ஆர் சந்திரசேகர், சேம்பர் ரங்கசாமி, இளங்குமரன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக, சார்பு அணி அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
Next Story