உணவு பாதுகாப்பு துறை மூலம் தற்காலிகமாக கடை மூடல்

உணவு பாதுகாப்பு துறை மூலம் தற்காலிகமாக கடை மூடல்
தற்காலிகமாக கடை மூடல்
நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் நேற்று வண்ணார்பேட்டையில் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இது சம்பந்தமாக அந்த கடையின் மீது பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், மேற்கண்ட கடையானது ரூபாய் 25 ஆயிரம் அபராதத்துடன் உணவு பாதுகாப்பு துறையின் மூலம் தற்காலிகமாக மூடப்பட்டது
Next Story