வீட்டு மனைப் பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

வீட்டு மனைப் பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
மனு
இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி க.அலம்பளம் கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனு விபரம்: கள்ளக்குறிச்சி அடுத்த க.அலம்பளம் கிராமத்தில் பல ஆண்டகளாக குடியிருந்து வருகிறோம். கிராமத்தில் உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் உட்பட பலர் வீடு இல்லாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றோம்.ஒரே வீட்டில் 3 குடும்பத்தினர் என தற்போது மிகவும் இட நெருக்கடியுடன் வசித்து வருகிறோம். இலவச வீட்டுமனைப் பட்டா வேண்டி பலமுறை மனு அளித்துள்ளோம். வீட்டு மனைப் பட்டா வழங்க வருவாய் துறையினரால் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே, எங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க ஒதுக்கப்பட்ட இடத்தினை தணிக்கை செய்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Next Story