ஆரணியில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு பெருமாள் கோயில்களின் சிறப்பு பூஜை.

ஆரணியில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு பெருமாள் கோயில்களின் சிறப்பு பூஜை.
ஆரணி, செப்.22 புரட்டாசி சனிக்கிழமை முன்னி்ட்டு ஆரணி பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது
ஆரணி நகரில் சார்ப்பனார் பேட்டை பகுதியில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு அதிகாலையிலேயே சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு , திருப்பதி ஏழுமலையானை போல கருவறையில் உள்ள வரதராஜரை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, நாராயணா என கோஷத்தோடு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். காலை முதல் இரவு வரை தொடர்ந்து பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது . இதேபோல ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ அலர்மேலு மங்கை சமேத சீனிவாச பெருமாள் கோவிலிலும், ஆரணி-தச்சூர் சாலையில் உள்ள கோதண்டராமர் கோவிலிலும் , சத்தியமூர்த்தி சாலையில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் கோவிலிலும் , எஸ்.வி. நகரம் பகுதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள் கோவிலிலும் , இரும்பேடு ஏ.சி.எஸ். நகரில் உள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலிலும் புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடத்தி மகா அலங்காரம், மகா தீபாராதனையுடன் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
Next Story