அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி., ஆய்வு

அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி., ஆய்வு
ஆய்வு
திருக்கோவிலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி., திஷா மிட்டல் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, போக்சோ மற்றும் வரதட்சணை குறித்து பதிவு செய்ய வேண்டிய வழக்குகள், அதில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிமைகள், வழக்கை விரைந்து முடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினார்.தொடர்ந்து போக்குவரத்து காவல் நிலையத்தில் ஆய்வு செய்து, பொதுமக்களின் சிரமத்தைத் தவிர்க்க போக்குவரத்து போலீசாரின் செயல்பாடுகள் சிறப்பாக அமைய வேண்டியதன் அவசியம், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து கூறினார். டி.எஸ்.பி., பார்த்திபன், இன்ஸ்பெக்டர்கள் சத்யன், சுமதி, சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெயமணி, கார்த்திகேயன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
Next Story