புஞ்சை புளியம்பட்டியில் பெயிண்ட் கடையில் பணம் திருட்டு

புஞ்சை புளியம்பட்டியில் பெயிண்ட் கடையில் பணம் திருட்டு
புஞ்சை புளியம்பட்டியில் பெயிண்ட் கடையில் பணம் திருட்டு
புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையம் முன்பு பெயிண்ட் கடைக்கு நேற்று முன்தினம் வந்த நபர் ஒருவர் யாசகம் கேட்டுள்ளார் அதற்கு கடையில் வேலை பார்க்கும் பெண் பணம் இல்லை என்று கூறி அவரை திருப்பி அனுப்பி விட்டார் பின்னர் அந்தப் பெண் அருகே உள்ள கடைக்கு சென்று விட்டு வந்து பார்த்தபோது யாசகம் கேட்ட நபர் அங்குள்ள பணப்பெட்டியில் இருந்து பணத்தை திருடிக் கொண்டு வெளியே சென்று கொண்டிருந்தார் உடனே அந்த நபரை கையும் களவுமாக பிடித்து புஞ்சை புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பதிவான கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனர் மேலும் அந்த நம்பரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது இதனால் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்
Next Story