கரூர் பூ மார்க்கெட் அருகே கஞ்சாவை பதுக்கிய இளைஞர் கைது.
Karur King 24x7 |22 Sep 2024 1:47 PM GMT
கரூர் பூ மார்க்கெட் அருகே கஞ்சாவை பதுக்கிய இளைஞர் கைது.
கரூர் பூ மார்க்கெட் அருகே கஞ்சாவை பதுக்கிய இளைஞர் கைது. கரூர் மாநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரயில் நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட் பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக காவல் உதவி ஆய்வாளர் நாகராஜனுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் செப்டம்பர் 21ஆம் தேதி இரவு 8:15- மணி அளவில்,கரூர் ரயில்வே ஜங்ஷன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அருகில் உள்ள பூ மார்க்கெட் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், கரூர் ரத்தினம் சாலையில் உள்ள, கே எம் சி காலனியை சேர்ந்த கார்த்திகேயன் மகன் மணிகண்டன் வயது 22 என்பவர் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. எனவே, மணிகண்டன் பதுக்கி வைத்த 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, மணிகண்டனை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல்துறையினர்.
Next Story