தொழிலாளியை தாக்கிய இருவர் கைது

தொழிலாளியை தாக்கிய இருவர் கைது
ஒருவருக்கு வலை
விருத்தாசலம் அடுத்த தீவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலாளியான ஜோதி மகன் செல்வகுமார் (வயது 34). அதே பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் மகன் சூரியநாராயணன் (34), பன்னீர்செல்வம் மகன்கள் தமிழ்மணி, தமிழ்ச்செல்வன் (24). இந்நிலையில் சம்பவத்தன்று செல்வகுமாரின் தங்கையிடம் மூவரும் ஏன் எங்கள் வீட்டு முன்னால் உங்கள் வீட்டு தண்ணீர் ஓடுகிறது என கேட்டு பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். இதனை தட்டிக் கேட்ட செல்வக்குமாரை சூரிய நாராயணன் உள்ளிட்ட மூன்று பேரும் சேர்ந்து அசிங்கமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வகுமார் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து சூரியநாராயணன், தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story