கருவேப்பிலங்குறிச்சி அருகே பெண் அரளி விதை அரைத்து குடித்து சாவு

கருவேப்பிலங்குறிச்சி அருகே பெண்  அரளி விதை அரைத்து குடித்து சாவு
போலீசார் விசாரணை
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள டி.வி.புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணபாலன் மனைவி மகேஸ்வரி (37). இருவருக்கும் கடந்த சில வருடத்திற்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் அடிக்கடி குடும்பப் பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி அன்று மீண்டும் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த மகேஸ்வரி அரளி விதையை அரைத்து குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதுகுறித்து அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சிகிச்சை அளித்த போது சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து மகேஸ்வரியின் சகோதரர் தேவேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story