கருவேப்பிலங்குறிச்சி அருகே அனுமதி இன்றி மதுபாட்டில் விற்ற பெண் உள்ளிட்ட இருவர் கைது
Virudhachalam King 24x7 |22 Sep 2024 5:39 PM GMT
60 மது பாட்டில்கள் பறிமுதல்
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் நேற்று கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குறுக்கத்தஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி மணிமேகலை (57) என்பவர் அனுமதி இன்றி தனது வீட்டில் அரசு மது பாட்டில்களை வைத்துக்கொண்டு விற்பனை செய்து வந்ததை கையும் களவுமாக பிடித்து கைது செய்ததுடன் அவரிடம் இருந்த 30 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் கிளிமங்கலத்தைச் சேர்ந்த பாண்டியன் (57) என்பவர் தனது வீட்டின் பின்புறத்தில் அனுமதி இன்றி அரசு மது பாட்டில்களை வைத்துக் கொண்டு விற்பனை செய்த போது கையும் களவுமாக பிடித்து கைது செய்ததுடன், அவரிடம் இருந்த 30 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story