ஆலங்குடி அருகே உதடை கடித்தவர் கைது

ஆலங்குடி அருகே உதடை கடித்தவர் கைது
ஆலங்குடி அருகே உதடை கடித்தவர் கைது
ஆலங்குடி அருகே உள்ள ஆண்டிக்கோன்பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா (50). இவரது வீட்டின் அருகே வசிக்கும் ரெங்கசாமி மகன் முருகேசன் குடும்பத்தினர் முத்தையாவின் இடத்தில் கழிவு நீரை விட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து முத்தையா அப்பகுதியில் மண் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரெங்கசாமி மகன்கள் முருகேசன், செல்வம், முருகேசன் மனைவி செல்வி, அரங்கசாமி மனைவி பிச்சையம்மாள் ஆகியோர் சேர்ந்து முத்தையாவை தாக்கியுள்ளனர். தொடர்ந்து முருகேசன் முத்தையாவின் மேல் உதட்டை கடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த முத்தையாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story