கழிவுநீர் ஓடிய விவகாரத்தில் பக்கத்து வீட்டுக்காரர் மீது தாக்கு!

கழிவுநீர் ஓடிய விவகாரத்தில் பக்கத்து வீட்டுக்காரர் மீது தாக்கு!
குற்றச்செய்திகள்
ஆலங்குடி அருகே உள்ள ஆண்டிக்கோன்பட்டியை சேர்ந்தவர் முத்தையா (50). பக்கத்து வீட்டில் வசித்தவர் முருகேசன். இவரது வீட்டில் இருந்து வெளியேறிய கழிவுநீர் முத்தை யாவுக்கு சொந்தமான இடத்தின் வழியாக சென்றது. இதனால் கழிவுநீரை தடுக்கும் வகையில் முத்தையா மண் கொட்டினார். இதை பார்த்து ஆத்திரமடைந்த முருகேசன், அவரது சகோதரர் செல்வம், முருகேசன் மனைவி செல்வி, ரங்கசாமி மனைவி பிச்சையம்மாள் ஆகி யோர் சேர்ந்து முத்தையாவை தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் ஆலங்குடி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிந்து முருகேசனை கைது செய்தனர்.
Next Story