வீட்டின் கதவை உடைத்து திருட்டு!
Pudukkottai King 24x7 |23 Sep 2024 3:13 AM GMT
குற்றச்செய்திகள்
கீரனுார்: குளத்துார் அம்மன் நகரை சேர்ந்தவர் நவீன்குமார்(30). இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் திருப்பதி சென்றுவிட்டு நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த வெள்ளிக் கொலுசு, குத்து விளக்கு, காமாட்சி விளக்கு மற்றும் வீட்டின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 பைக்குகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நவீன் குமார் அளித்த புகாரின் பேரில் கீரனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story