புறநகர் பகுதியில் கஞ்சா, குட்கா, மதுபானம் பறிமுதல்

புறநகர் பகுதியில் கஞ்சா, குட்கா, மதுபானம் பறிமுதல்
திண்டுக்கல் குட்டத்துபட்டி உள்ளிட்ட புறநகர் பகுதியில் கஞ்சா, குட்கா, மதுபானம் பறிமுதல் - தாலுகா காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் அமுதா தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் மற்றும் காவலர்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் அப்போது குட்டத்துப்பட்டி பகுதியில் அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த பொன்னுத்தாய், மேட்டுப்பட்டி எம்ஜிஆர் நகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த கரோலின் ஜெனிபார் மற்றும் NGOகாலனி ராமர் காலனி பகுதியில் உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்த ஹரிகிருஷ்ணன் ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சா, குட்கா, மதுபானம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை.
Next Story