திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் இறகுப்பந்து போட்டியில் முதலிடம்!

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் முதலமைச்சர் கோப்பைக்கான இறகுப்பந்து விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்றார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் இறகுப்பந்து போட்டியில் முதலிடம் திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அரங்கத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி கடந்த ஒருவாரமாக நடந்துட்டு வருது. அதில் ஒற்றையர் பிரிவு இறகு பந்து போட்டியில் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் IAS அவரு  கலந்துகொண்டு முதலிடத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு பலர்  பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் அரசு அலுவலர்களுக்கான இரட்டையர் பிரிவு இறகு பந்து போட்டியில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் IAS, உடன் இணைந்து பவன்குமார் ஜி.கிரியப்பனவர்  விளையாடினார்கள். அங்குள்ள அனைவருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Next Story