வடக்கு பாளையத்தில் முன் விரோதம் காரணமாக உறவினர்கள் இடையே தகராறு. மூதாட்டியை தாக்கிய வாலிபர் கைது.

வடக்கு பாளையத்தில் முன் விரோதம் காரணமாக உறவினர்கள் இடையே தகராறு. மூதாட்டியை தாக்கிய வாலிபர் கைது.
வடக்கு பாளையத்தில் முன் விரோதம் காரணமாக உறவினர்கள் இடையே தகராறு. மூதாட்டியை தாக்கிய வாலிபர் கைது. கரூர் மாவட்டம், எஸ். வெள்ளாளப்பட்டி அருகே உள்ள வடக்கு பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரப்பன் மனைவி சீரங்காயி வயது 72. இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது உடன்பிறந்த சகோதரியின் மகன் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் ரமேஷ் குமார் வயது 37. இவர்கள் இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே குடும்ப தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 19ஆம் தேதி காலை 10 மணி அளவில் சீரங்காயி தனது வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ரமேஷ் குமார் சீரங்காயிடம் தன்னிச்சையாக சென்று, தகாத வார்த்தை பேசி கைகளால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் முகத்தில் காயம் அடைந்த ஸ்ரீரங்காயி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், இது தொடர்பாக அளித்த புகாரில், அன்றைய தினமே சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர் காவல்துறையினர். பின்னர் ரமேஷ் குமாரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரை பிணையில் விடுவித்தனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.
Next Story