சணப்பிரெட்டி அருகே டூவீலர்கள் மோதல் பெண் உள்பட இருவர் படுகாயம்.

சணப்பிரெட்டி அருகே டூவீலர்கள் மோதல் பெண் உள்பட இருவர் படுகாயம்.
சணப்பிரெட்டி அருகே டூவீலர்கள் மோதல் பெண் உள்பட இருவர் படுகாயம். கரூர் எஸ் வெள்ளாளப்பட்டி அருகே உள்ள வடக்கு பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம் மனைவி ரங்கம்மாள் வயது 55. இவர் செப்டம்பர் 22ஆம் தேதி காலை 10 மணி அளவில், கரூர் -திருச்சி சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். அதே சாலையில் திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கண்ணனூர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் அன்பழகன் வயது 45 என்பவர் மற்றொரு டூவீலரில் ரங்கம்மாளுக்கு பின்னால் சென்று கொண்டிருந்தவர், திடீரென தனது டூவீலரின் வேகத்தை கூட்டியதால், வேகமாக சென்ற டூவீலர், ரங்கம்மாளின் டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இருவரும் வாகனத்துடன் கீழே விழுந்ததில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ரங்கம்மாளை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும்,அன்பழகனை திருச்சி காவேரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக ரங்கம்மாள் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய அன்பழகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.
Next Story