கோவிலுக்கு சொந்தமான சலை எருது மாடு உயிரிழப்பு

கோவிலுக்கு சொந்தமான சலை எருது மாடு உயிரிழப்பு
ஊர் மக்கள் சார்பில் அஞ்சலி
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கல்லடை ஊராட்சி முத்தாநாயக்கன்பட்டி கிராமத்தில் கோவிலுக்கு சொந்தமான சலை எருது மாடு உள்ளது. இந்த மாடு குளித்தலை சுற்றியுள்ள கிராமங்களில் நடத்தப்படும் மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளது. வயது முதிர்வு காரணமாக சலை எருது மாடு இன்று உயிரிழந்தது. அதையொட்டி அப்பகுதி மக்கள் சார்பில் மாட்டிற்கு மாலை அணிவித்து தேங்காய் பழம், வேஸ்டி கொண்டு பூஜை செய்து அஞ்சலி செலுத்தினர். பிறகு தேவராட்டம் ஆடி உறுமி அடித்து சமுதாய வழக்கப்படி சலை எருது மாட்டை ஊர்வலமாக கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.
Next Story