மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிறப்பு மாநாடு நடைபெற்றது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிறப்பு மாநாடு நடைபெற்றது
பள்ளிபாளையம் தனியார் மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிறப்பு மாநாடு நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பழனியப்பன் பாவாயம்மாள் தனியார் திருமண மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிறப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு ஒன்றிய குழு செயலாளர் ஆர்.ரவி தலைமை தாங்கினார்.பள்ளிபாளையத்தில் தொடரும் கந்து வட்டி நிறுவனங்களின் அட்டூழியங்களை தடுத்து நிறுத்த கூறியும், நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதை முறைப்படுத்திடக் கோரியும் நடைபெற்ற இந்த சிறப்பு மாநாட்டில்  இதில் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  மேலும் இந்த நிகழ்வில் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்து கண்ணன், மாவட்ட குழு செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  ஏ.ரங்கசாமி, பி.பெருமாள், எம்.அசோகன், என்.வேலுச்சாமி, கே.தங்கமணி, எஸ்.தமிழ்மணி, பி.ஜெயமணி, சு.சுரேஷ் , ஏ.டி.கண்ணன்,  எம்.கணேச பாண்டியன்,  மாவட்ட குழு உறுப்பினர்கள் கே.மோகன் இ.கோவிந்தராஜ், ஆர்.அலமேலு,  பள்ளிபாளையம் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.குமார் , எஸ்.முத்துக்குமார், எஸ்.சம்பூரணம், எஸ்.சரவணன்,  எம்.லட்சுமணன், எஸ்.அண்ணாதுரை மற்றும்  வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்  ப.பா.மோகன்  மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், வர்க்க வெகுஜன அமைப்புகளை சேர்ந்தவர்கள்,மாவட்டம் முழுவதும் இருந்து பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள்  என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்...
Next Story