அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் சார்பில் திருமணி முத்தாறு மற்றும் காவிரி ஆற்றை பாதுகாக்க சிறப்பு பூஜை.
Paramathi Velur King 24x7 |23 Sep 2024 2:13 PM GMT
பரமத்தியில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் சார்பில் திருமணி முத்தாறு மற்றும் காவிரி ஆற்றை பாதுகாக்க சிறப்பு பூஜை.
பரமத்திவேலூர்,செப்.23- நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தியில் உள்ள திருமணிமுத்தாறு நதிக்கு. அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் சார்பில் திருமணி முத்தாறு மற்றும் காவிரி ஆற்றை பாதுகாக்கும் வகையில் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்து அதன் சிறப்புகளை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி வருகின்றனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பரமத்தியில் உள்ள பழைய பாலம் பகுதியில் உள்ள திருமணிமுத்தாற்றில் அகில இந்திய அகில பாரதீய சன்னியாசிகள் சங்கத்தின் சார்பில் சிறப்பு ஆராதனையும், மகா தீபாராதனையும் செய்தனர். பின்னர் திருமணிமுத்தாற்றில் மலர்கள் தூவி வழிபட்டனர். இந்நிகழ்வில் அகில பாரதீய சன்னியாசிகள் சங்கத்தின் நிர்வாகி ராமானந்தபுரி தலைமையில் 20- க்கும் மேற்பட்ட அகில பாரதீய சன்னியாசிகள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story