காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ, மத்திய இணை அமைச்சர், பா.ஜ.க தமிழக பொறுப்பாளர் மீது போலீசில் புகார்

காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ, மத்திய இணை அமைச்சர், பா.ஜ.க தமிழக பொறுப்பாளர் மீது போலீசில் புகார்
காங்கிரஸ் சார்பில், எம்.எல்.ஏ, மத்திய இணை அமைச்சர், பா.ஜ.க தமிழக பொறுப்பாளர்மீது போலீசில் புகார்
இந்திய எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை பற்றி அவதூறு பேசி வரும் முக்கிய பிரமுகர்கள் மீது குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில், நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் போலீசில் புகார் மனு கொடுக்கப்பட்டது. இதில் குறிப்பிட்டுள்ளதாவது: இந்திய எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை தரக்குறைவாகவும், தேசத்துரோகி என்றும், அவரின் நாக்கை அறுப்பவர்களுக்கு 11 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும் என்று அறிவித்த, மகாராஷ்டிர எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட், மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவனித் சிங், தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் ராஜா ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story