புதிய நீதிபதி நியமனம் நீதிபதி, வழக்கறிஞர் சங்கத்தினர் வாழ்த்து

புதிய நீதிபதி நியமனம் நீதிபதி, வழக்கறிஞர் சங்கத்தினர் வாழ்த்து
குமாரபாளையம் நீதிமன்றத்தில் புதிய நீதிபதி நியமனம் செய்யப்பட்டதையடுத்து, நீதிபதி, வழக்கறிஞர் சங்கத்தினர் வாழ்த்து
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் புதிய தாலுக்காவாக 2016, பிப் 27ல் அறிவிக்கப்பட்ட பின், குமாரபாளையம் எம்.ஜி.ஆர். நகர் பஸ் நிறுத்தம் அருகே 2020, ஜூலை 18ல் வாடகை கட்டிடத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தொடங்கப்பட்டது. உயர்நீதிமன்ற உத்திரவின் பேரில், குமாரபாளையம் நகரில் செயல்பட்டு வரும், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக நவீனா பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய நீதிபதி நவீனாவுக்கு, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாலதி, குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சரவணராஜன், செயலர் நடராஜன், பொருளர் நாகப்பன், துணை செயலர் ஐயப்பன் உள்பட வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story