நின்றிருந்த லாரி மீது டூவீலர் மோதியதில் தனியார் மில் தொழிலாளி படுகாயம்

நின்றிருந்த லாரி  மீது டூவீலர்  மோதியதில் தனியார் மில் தொழிலாளி படுகாயம்
குமாரபாளையம் அருகே நின்றிருந்த லாரி மீது டூவீலர் மோதியதில் தனியார் மில் தொழிலாளி படுகாயமடைந்தார்.
ஈரோடு மாவட்டம் ராமநாதபுரம் புதூர் பகுதியில் வசிப்பவர் தமிழ்வாணன், 54. குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு பகுதியில் தனியார் மில்லில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் செப் 16ல் இரவு 09:00 மணியளவில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக, தனது ஸ்கூட்டி பெப் டூவீலரில் சேலம் கோவை புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தார். கோட்டைமேடு பகுதியில் பாலத்தின் மேலே நிறுத்தக்கூடாத இடத்தில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. இதன் மீது எதிர்பாராத விதமாக மோதியதில், இவர் பலத்த காயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமான சரக்கு வாகன ஓட்டுனர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சோவால் சிங், 43, என்பவரை கைது செய்தனர்.
Next Story