செல்போன் பேசியதை தந்தை தட்டி கேட்டதால் கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்ற கல்லூரி மாணவி மாயம்

X
விருத்தாசலம் அருகே உள்ள தே. கோபுராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் மகள் விஷ்ணுபிரியா(17) தலைவாசலில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிஇ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் விஷ்ணு பிரியா அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை அவரது தந்தை விக்னேஷ் கண்டித்ததுடன் கடந்த 20 ம் தேதி அன்று செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்து கோபித்துக் கொண்டு விஷ்ணுபிரியா வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்ப வீட்டிற்கு வரவில்லை. அவரது தோழிகள் வீடுகள் உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து விஷ்ணு பிரியாவின் தாய் தேவி கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற.
Next Story

