கத்தியைக் காட்டி மிரட்டி தொழிலாளியிடம் வழிப்பறி

கத்தியைக் காட்டி மிரட்டி தொழிலாளியிடம் வழிப்பறி
வழிப்பறி
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்த புக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன், 44; செங்கல் சூளை தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில், பல்சர் பைக்கில் கள்ளக்குறிச்சியில் இருந்து வீட்டிற்குச் சென்றார்.வீரசோழபுரம் அருகே, அடையாளம் தெரியாத 3 பேர் பழனியப்பனை மறித்து கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த 30 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றனர். புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்
Next Story